கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு

Update: 2021-04-19 07:45 GMT

தென்காசி மாவட்டத்தில் கோவிலில் மின் விளக்கு அமைத்து தர கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

தென்காசி வட்டாட்சியரிடம் ராஜாங்கபுரம் கிராம மக்கள் மற்றும் வி.எச்.பி அமைப்பினர் இணைந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் கூறப்பட்டிருப்பதாவது:-எங்களது கிராமம் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் - கோவிந்தப்பேரி செல்லும் சாலையில் உள்ளது. இந்த கிராமத்தில் மாடத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் கடந்த சில மாதங்களாக சமூகவிரோதிகளால் அவ்வப்போது சேதபடுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தோம். அவர்கள் அப்பகுதியினை ஆய்வு செய்து இப் பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் இது போன்ற சமூகவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன என்று தெரிவித்தார். எனவே தாங்கள் தயவு கூர்ந்து ஊரில் உள்ள கோவில் அமைந்து இருக்கும் பகுதியில் மின்விளக்கு வசதி செய்த தர தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News