தமிழக - கேரள எல்லை பகுதியில் வாகன சோதனை

தமிழக மற்றும் கேரள எல்லை பகுதியில், வாகன சோதனையில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.

Update: 2022-09-26 05:47 GMT

வாகன சோதனையில் ஈடுபட்ட நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார்.

தமிழக - கேரள எல்லை பகுதியில், புளியரை சோதனை சாவடியில் நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட போலீஸ் எஸ்.பி கிருஷ்ணராஜ் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் போலீசார், தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக கேரள எல்லையான, புளியரை போலீஸ் சோதனைச் சாவடியில் புளியரை போலீசாருடன் இணைந்து, நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, தகுந்த அறிவுரை வழங்கினர்.

Similar News