தென்காசியில் வருமுன் காப்பாேம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

தென்காசியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Update: 2021-11-22 11:10 GMT

தென்காசியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தென்காசி சிறப்பு மருத்துவ முகாம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தென்காசியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உட்பட பல்வேறு நோய்க்கான பரிசோதனை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், தென்காசி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், அரவிந்த், முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், தமுமுக மாவட்ட தலைவருமான சலீம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News