தென்காசி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

தென்காசியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கன்டித்து எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-10 06:31 GMT

தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டும் தூர்த்தில் உள்ளன. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தநிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சேக் ஜிந்தா மதார் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தனர்.

#Tenkasi #SDPI #protest #against #petrol-diesel #price #hike #தென்காசி #பெட்ரோல் #டீசல் #விலைஉயர்வை #கண்டித்து #எஸ்டிபிஐ #ஆர்ப்பாட்டம் #tamilnadu #petrol #diesel

Tags:    

Similar News