வேட்பாளர்களுடன் தென்காசி கலெக்டர் ஆலோசனை

Update: 2021-04-23 06:00 GMT

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடு மற்றும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் மே-2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் பத்திரப்படுத்தபட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News