சுரண்டையில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பு.

Update: 2022-02-16 01:58 GMT

சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சுரண்டை 27 வார்டுகள் கொண்ட புதிய நகராட்சி பகுதி. இங்குள்ள 27 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சுரண்டை நகராட்சி பகுதிகளில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட வருகை தந்த அவருக்கு தென்காசி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது சுரண்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வள்ளி முருகன், உட்பட மற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு விஜய் வசந்த் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இந்த பிரச்சாரத்தின் போது ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News