தென்காசியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழை

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Update: 2022-04-12 14:21 GMT

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி பகுதியில் வெப்பம் தணிந்து இதமான கால சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News