சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோக இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2021-08-16 06:45 GMT

தென்காசி பகுதியில் அறுவடை செய்யது குவித்து வைக்கப்பட்டடுள்ள சின்ன வெங்காயம்.

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர், பட்டா குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். சின்ன வெங்காயம் விதை 60 ரூபாய்க்கு வாங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் விதை நட்டு, 75 நாட்கள் பயிர்களைப் பாதுகாத்து உரம், சம்பளம் கூலி, உள்ளிட்ட செலவுகளை கடன் வாங்கி செய்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் உரிய விலை கிடைக்கவில்லை எனவும் கூறினார். தற்போது சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், அது 40 ரூபாய் வரை கொள்முதல் செய்தால் மட்டுமே தங்களது கடனை அடக்க இயலும். மேலும் நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால் எங்களுக்கு விவசாயம் தவிர மற்ற பணிகள் எதுவும் தெரியாது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News