குற்றால அருவிக்கரைகளில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு
தென்காசி மாவட்டம், குற்றால அருவிக்கரைகளில், ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள், வரும் 20ஆம் தேதி முதல், பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அருவிக்கரை பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் சேக் அப்துல்லா மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.