பெயிண்டர், ஒவியர்களுக்கு தனியாக அரசு நலவாரியம் அமைக்க தீர்மானம்
Courtallam Today - பெயிண்டர், ஒவியர்களுக்கு தனியாக அரசு நலவாரியம் அமைக்க குற்றாலத்தில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம்.
Courtallam Today -தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் விடுதி கூட்டரங்கில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் 2-ம் ஆண்டு விழா கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாநிலத் தலைவர் சதுரகிரி, பொதுச் செயலாளர் சித்திக் அலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பெயிண்ட் கம்பெனிகள் நேரடியாக பெயிண்ட் தொழில் செய்வதை கைவிட வேண்டும்.பெயிண்டர்களுக்கு என தனி நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை தடை செய்யும் அரசு பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை தடை செய்து பெயிண்டர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2