செங்கோட்டையில் டவர் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள்மனு

செங்கோட்டையில் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-03-11 01:30 GMT

செங்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி மேலூர் பகுதியில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் உள்ளனர். இப்பகுதியில் சென்ற ஆண்டு தனியார் கட்டிடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது, மீண்டும்  அப்பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்,  தங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதனால் பறவை மற்றும் விலங்கினங்களுக்கு கதிர்வீச்சு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்படும். குடியிருப்பாளர்களும் பாதிக்கபப்டுவர். எனவே இந்த செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடை செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News