பொங்கல் பரிசுத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000 வழங்கக்கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பொங்கல் பரிசுத் தொகை ரூ 5000 வழங்கக்கோரி, இந்து தேசிய கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்துக்கு, காவல்துறை அதற்கு அனுமதி வழங்காததால், மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் பானை ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.