பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Demonstratives - தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Demonstratives- அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வம் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தென்காசி மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைத்தேவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் கூறுகையில், பொதுத் குழுவிற்கு கலந்து கொள்ள சென்ற அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னிர்செல்வத்தை "தாக்க முயன்று, அவரது காரின் டயரை சேதப்படுத்தி அவமானப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் கோஷ்டியினரையும், அவரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், 3000 பேர் கொண்ட கட்டத்தில் ஓபிஎஸ்-ற்கு உறுதுணையாக இருந்த மரியாதைக்குரிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு எங்கள் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் எடப்பாடி தலைமையிலான கட்சிக்கு தமிழக முக்குலத்தோர் சமுதாய ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஆகி விடும் என்றும், இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் எங்கள் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2