ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்.

Update: 2022-05-11 06:00 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய பதிலைக் கேட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News