தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2022-02-08 07:59 GMT

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தென்காசி காவல் துறையினர்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி ICI அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசி மேல பாறையடி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் காளிதாஸ் என்பவரை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்கள் மாணவனின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து செதஸ்கோப் வழங்கி தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தனது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த காவல்துறையினருக்கு காளிதாஸ் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்

Tags:    

Similar News