ஆண்கள் சுய உதவிக் குழுவினர் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு
மத்திய கூட்டுறவு வங்கியில் குழு கடன் பெற்ற ஆண்கள் சுய உதவிக் குழுவினர், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆண்கள் சுய உதவி குழு சார்பில் ஒய்.ஜி.மாரியப்பன் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தென்காசி கிளை மூலம் ஆண்கள் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டது. இக்கடன் முழுமையும் தள்ளுபடி செய்து தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் வங்கி ஊழியர்கள் அரசாணைக்கு எதிராக கடன் பெற்ற மக்களை கடனை திரும்ப செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தி வற்புறுத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த இந்த காலகட்டத்தில் வங்கி அரசிற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு குழு கடனை தள்ளுபடி செய்ததை உறுதிப்படுத்தி கந்து வட்டி கொடுமையில் இருந்து எங்களை காத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.