தென்காசியில் மின் ஒயர் அறுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தென்காசியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.

Update: 2021-08-05 14:50 GMT

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் இன்று மாலை குத்துக்கல்வலசை சேர்ந்த முருகேசன் என்பவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மின் கம்பத்தில் உள்ள மின் ஒயர் அறுந்து விழுந்துள்ளது.

அதனை கையில் எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News