தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை விழிப்புணர்வு பேரணி

தென்காசி அருகே மாணவர்களுக்கான இயற்கை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-02-17 11:38 GMT

ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகளான ஆர்த்தி, ஜான்சிராணி, மெர்லின், நந்தனா பாஜி, ராஜாத்தி, ரங்கீலா , சபிதா,  சுபஸ்ரீ, நிவேதா, ஹம்சவேணி மற்றும் சௌமியா ஆகியோர் தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியை  அன்னமுத்து மற்றும் இணை ஆசிரியர்களுடன் இணைந்து இந்த பேரணி நடத்தினர்.  இந்த விழிப்புணர்வு பேரணி "மனிதனே ! இயற்கைக்கு திரும்பி வா !!! என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வையும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்பட்டது.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News