பேரூராட்சியை கைப்பற்ற குதிரை பேரத்தில் ஈடுபடும் திமுக: எம்எல்ஏ குற்றச்சாட்டு

குற்றால பேரூராட்சியை கைப்பற்ற திமுக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கடையநல்லூர் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்

Update: 2022-03-04 01:21 GMT

ஆட்சியரிடம் மனு அளிக்கும் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி

தென்காசியில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக குதிரை பேரத்திலும், தலைவர் தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாகவும் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி குற்றச்சாட்டு

தென்காசியில் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் திமுக தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாக கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

திமுக நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பல குறுக்கு வழியை கையாளுகிறது. செங்கோட்டை, ஆழ்வார்குறிச்சி போன்ற பகுதிகளிலும் குறிப்பாக குற்றாலம் பேரூராட்சியில் சம பலத்தில் உள்ளதால் திமுக அதிமுக வேட்பாளரிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதில் உடன்படாதவர்கள் மீது காவல்துறை வாயிலாக பொய் வழக்ககுளை போட்டு வருகிறது. மேலும் வெற்றி கிடைக்காத பட்சத்தில் தேர்தலை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபட உள்ளது. எனவே தேர்தலை நியான முறையில் நடத்தக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News