குற்றாலத்தில் ச.ம.உ தலைமையில் மக்கள் முதல்வர் திட்ட முகாம் !
குற்றாலத்தில் மக்கள் முதல்வர் திட்ட முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தனியார் வேலை வாய்ப்பு, கல்வி கடன், வங்கி கடன், என பல்வேறு துறைகள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடம் மனு பெற்று அதனை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை, மேலகரம் மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். சுரண்டை நகர மன்ற தலைவர் வள்ளி முருகன், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள்,மாவட்டச் செயலாளர் சந்தோஷ், கணேசன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கிருஷ்ணராஜா, குற்றாலம் நகர செயலாளர் குட்டி, குற்றாலம் சுரேஷ் , உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.