சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான உதவி மையம் துவக்கம்

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Update: 2022-03-11 05:15 GMT

சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான உதவி மையம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 444 சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கு 08.03.2022 முதல் 07.04.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் என்றால் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 09.00 மணி முதன் மாலை 06.00 மணி வரை நேரில் சென்றோ அல்லது 9789118638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News