திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!

திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி எனவும் தமிழக முதல்வர் தான் மாட்டிக் கொள்வோம் என்ற பதட்டம் காரணமாகவே பாஜகவை மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டு இருப்பதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Update: 2023-06-17 07:58 GMT

பட விளக்கம்: தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை தோலுரித்து காட்ட வேண்டிய நேரம் இது எனவும் திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி,என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் தனது பொறுப்பை உணராமல் மேடை பேச்சாளரை போல் பேசி வருகிறார். மேலும் தமிழ்நாட்டிற்கு தவறான முன் உதாரணத்தை தமிழகம் முதல்வர் தோற்றுவிக்கிறார்.

பதட்டம் காரணமாகவே தமிழக முதல்வர் பாஜகவை எச்சரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். குற்றம் உள்ள மனது குறுகுறுக்கும் என்ற வகையில், தான் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறார்.

உண்மையை மறைத்து உடல் நலத்தை காரணம் காட்டி ஒத்துழைக்காதது என்பது தவறான செயல். மேலும் இவ்வாறு செந்தில் பாலாஜியை பாதுகாப்பது என்பது தண்ணீரில் மூழ்கியவனை நீச்சல் தெரியாதவன் பாதுகாப்பதற்கு சமம் எனக் கூறினார்.

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அந்த வகையில் செந்தில் பாலாஜியின் குடும்பம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சூசகமாக தெரிவித்தார்.

Tags:    

Similar News