கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கால்நாட்டு வைபவம்

கடையம் உடையார் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கால்நாட்டு மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது.

Update: 2022-06-11 06:08 GMT

கடையம் உடையார் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கால்நாட்டு மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது.

கடையம் உடையார் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் கால்நாட்டு மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் வடக்கு பஜாரில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் ஆலயம்.  சுமார் 1,200 ஆண்டுகள் பழ.மை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும். அகஸ்தியரால் வழிபடப்பட்ட பெருமையும் உடைய ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு வருகிற 19ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வெகு காலங்களுக்குப் பின்பு தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேகத்திற்கான கால் நடுதல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடையார் சாம்பியன்ஸ் கிளப் நண்பர்கள், மற்றும் கீழக்கடயம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் புளி கணேசன், ராமசாமி,,யுசிசி நிர்வாகிகள் வேல்முருகன் கணேசன், மற்றும் திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags:    

Similar News