ஜெயலலிதா பிறந்தநாள் விழா: முன்னாள் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, தென்காசியில் முன்னாள் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சி நகரச் செயலாளர் சுடலை உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.