இன்று கவுன்சிலர்கள் பதவி ஏற்பு: நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எஸ்பி ஆய்வு

கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-03-02 03:27 GMT

கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் காவல் துறையினரின் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கோட்டை நகராட்சி மற்றும் குற்றாலம் பேரூராட்சி அலுவலகங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், செங்கோட்டை காவல் ஆய்வாளர்  சியாம் சுந்தர் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News