தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்பு

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ரவி பங்கேற்று ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Update: 2022-06-19 04:18 GMT

தென்காசி அருகே நடந்த மென்பொருள் நிறுவன விழாவில் தமிழக ஆளுனர் ரவி பங்கேற்று பேசினார்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் அமைந்துள்ள தனியார் சோகோ மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாரத பிரதமர் நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதாகவும் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மற்ற நாடுகளுக்கு தலைமை நாடாகவும் முதன்மை நாடாகவும் இந்தியா தலை சிறந்து விளங்கும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மென்பொருள் நிறுவனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News