Gents Not Allowed For Bath குற்றால அருவிகளில் 4 மணி நேரம் ஆண்களுக்கு குளிக்க தடை ஏன் தெரியுமா?

Gents Not Allowed For Bath கார்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமைகளில் குற்றால அருவிகளில் நான்கு மணி நேரம் மட்டும் ஆண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-27 07:30 GMT

 குற்றாலத்தில் சிறப்பு வழிபாடு நடத்திய பெண்கள்.

Gents Not Allowed For Bath

குற்றாலம் தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஒன்று. இங்கு குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத தேனருவி மற்றும் செண்பகாதேவி அருவி என ஏராளமான அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் அதுவும் குறிப்பாக குற்றாலம் பிரதான அருவியில் நான்கு மணி நேரம் ஆண்களுக்கு குளிக்க அனுமதி இல்லை. காரணம் என்ன  பார்ப்போம்.

கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவும், திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், குற்றால அருவிகளில் புனித நீராடி அருவிக்கரையில் இருக்கும் விநாயகரை வழிபட்டு, பின்னர் அரசு வேம்பு மரங்கள் இணைந்து இருக்கும் பகுதியில் அமைந்துள்ள நாகக்கன்னிக்கு மஞ்சள் பழம் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

Gents Not Allowed For Path


குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கட்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்திய பெண்கள்.

இன்று திங்கட்கிழமை என்பதால் தென்காசி, செங்கோட்டை,பண்பொழி, கட்டைய நல்லூர், பாவூர்சத்திரம், கடையம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் அதிகாலை 3 மணி முதல் குற்றால அருவியில் புனித நீராட குவிந்துள்ளனர். புனித நீராடி பின்ன

ர் விநாயகர் வழிபட்டு நாககன்னிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை குற்றால அருவிகளில் ஆண்களுக்கு குளிக்க அனுமதி இல்லை. ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 7 மணிக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News