தென்காசியில் கஞ்சா, கள்ளநோட்டுகளுடன் கும்பல் கைது

Ganja Seized -தென்காசியில் கஞ்சா, கள்ளநோட்டுகளுடன் இருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-10 11:09 GMT

கள்ள நோட்டுகள் மற்றும் கைதானவர்கள்.

Ganja Seized -தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் பஞ்சா மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் மற்றும் ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து காவல் மண்டலத் தலைவர் அஸ்ரா கார்க் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். இதன்படி  கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் நிலைய  ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் தனிப்படை உதவியுடன் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பல இடங்களி்ல் திடீர்  சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா என்பவரது மகன் மணிச்செல்வன் வயது 28 மற்றும் செங்கோட்டை பெரிய பிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்ச கும்பு மகன் மணிகண்டன் வயது 24 ஆகியோர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார்கள். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின்முரனாக பதில் சொன்னார்கள். இதனால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனா்.  அப்போது அவர்களிடமிருந்து  1,20,000  ரூபாய் மதிப்பிலான சுமார் 4 கிலோ கஞ்சாவும், 2,00,000 மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  அவைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து இது சம்பந்தமாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் செங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தெற்கு மேடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சேது என்ற வடிவேல் மகன் பிரகலாதன் என்பவரும் விஸ்வநாதபுரம் புதுமனை தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் மாரிமுத்து ஆகிய இரண்டு நபர்களும் ரூபாய் 2லட்சத்து 25ஆயிரம்  மதிப்புள்ள  கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகள் அவர்களுக்கு எப்படி கிடைத்து என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 தெற்க்கு மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசார் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் சமீபகாலமாக கஞ்சா, குட்கா, மது பாட்டில்கள் என தென்காசி மாவட்டங்களில் அதிக அளவு தாராளமாக புழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது ஒரிரு நாட்களில் கஞ்சா, கள்ள நோட்டுகள் என தென்மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இதனால்  தெற்க்கு மண்டல காவல்துறை தலைவரின் தனிபடை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News