முழு ஊரடங்கு:சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர்
தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்
ஊரடங்கில் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு தென்காசி காவல்துறையினர் உணவு வழங்கினர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் அடைக்க்கபட்டது.
இந்நிலையில் தென்காசி பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நபர்கள்,முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.காவல்துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.