தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2021-09-04 09:57 GMT

தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.

திருநெல்வேலி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நாகர்கோவில் பெஜான்ஸிங் கண் மருத்துவமனை, தென்காசி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு ஒருங்கிணைப்பாளர் முகமது அலி தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், நாகர்கோவில் பெஜான்ஸிங் கண் மருத்துவமனை, முகாம் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார். தென்காசி ரப்பானியா தொடக்கப்பள்ளி தாளாளர் சம்சுதீன் உலவி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சித்தீக் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கண் புரை, பார்வை குறைபாடு, உள்ளிட்ட கண் நோய் சம்பந்தமான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News