தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை

Update: 2021-03-25 10:00 GMT

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைத்து தேர்தல் கமிஷன் கண்காணித்து வருகிறது. அதன்படி சுரண்டையில் தேர்தல் நிலைக்குழு பறக்கும்படை 2 முகைதீன் பிச்சை தலைமையில் எஸ்எஸ்ஐ கமலக்கண்ணன், பால்ராஜ், சதீஷ்குமார், ஸ்ரீதர் தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரகேரளம்புதூர் தாலுகா மற்றும் சுரண்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News