சுரண்டை பள்ளி விவகாரம்: உதவி ஆய்வாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

சுரண்டை உதவி ஆய்வாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்.

Update: 2021-11-20 03:03 GMT

பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர்  காவல் கண்காணிப்பளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் தாலுகா, பங்களா சுரண்டையில் இயங்கி வந்த பேரன் புரூக் பள்ளியில் குங்குமம் மற்றும் திருநீறு வைத்து வந்த இந்து மாணவியை அந்த குங்குமம், திருநீறை அளிக்க செய்தது மற்றும் அந்த மாணவியின் புகைப்படத்தை தவறாக சுத்தரித்து பலருக்கு பரப்பிய பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் மீது தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகார் மீது விசாரணை நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேற்று சுரண்டை உதவி ஆய்வாளர் விமலா, மேற்படி பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெற்று வழக்கை முடித்து வைக்க முயற்சித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து  காவல் கண்காணிப்பளரை சந்தித்து புகார் மனு கொடுக்கப்பட்டது. அப்போது இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து ஜி, மாவட்ட துணைத்தலைவர் முருகன் ஜி, ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News