சங்கரன்கோவில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திமுகவினர் புகார்

Update: 2021-03-28 10:49 GMT

தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பத்மநாதன், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான முருக செல்வி இருந்து வருகிறார். அவர் அதிமுக அமைச்சர், அதிமுக சட்டமன்ற தொகுதி அவரது செயல்பாடுகள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளதாக அந்த மனுவில் கூறியுள்ளனர்.

பிரச்சார வாகனங்களுக்கு அனுமதியில் பாரபட்சம் காட்டுகிறார். அதேபோல் அமைச்சரின் இல்ல விழாவை இவரே முன்னிட்டு நடத்தி உள்ளார். மேலும் கோட்டாட்சியர் முருக செல்வி மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு கட்சி சார்பாக நடந்து கொள்வது அவர் மீது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றிவிட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

Tags:    

Similar News