குற்றால அருவிகளில் நீராட விதித்த தடையை நீக்க வேண்டும், ஜெயக்குமார் எம்பி

குற்றால அருவிகளில் நீராட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Update: 2021-09-03 03:51 GMT

குற்றாலத்தில் பேட்டி அளித்த எம்பி ஜெயக்குமார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவரும், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. திரையரஙகுகளும் திறக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் குற்றால அருவியில் மக்கள் நீராட இன்னும் அரசு அனுமதிக்கவில்லை . அருவியல் நீராட மக்களை அனுமதிப்பது எந்த சிக்கலும் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

இது இப்பகுதியில் உள்ள ஏராளமான வர்த்தகர்களின் வாழ்வாதார பிரச்சனையும் கூட எனவே தமிழக முதல்வர் இது குறித்து பரிசீலித்து பொதுமக்கள் அருவியில் நீராட அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, வேளாண் திட்டங்களை இப்போது எதிர்க்கும் திமுக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

நிச்சயம் மூன்று மாதத்தில் இந்த சட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் திருத்தம் கொண்டு வரும் நிலை உருவாகும்,  அதற்கு தமிழக முதல்வரே காரணகர்த்தாவாக இருப்பார் எனவே அது நிச்சயம் திமுக ஆதரிக்கும் என்றார்.

Tags:    

Similar News