காங்கிரஸ் கட்சி 137 ஆண்டு தொடக்க விழா: காந்தி சிலைக்கு தென்காசி எம்எல்ஏ மரியாதை

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பழனி நாடார் எம்எல்ஏ காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2021-12-28 07:53 GMT

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தென்காசியில் உள்ள காந்தி சிலைக்கு எம்எல்ஏ பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு தொடக்க விழா. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் 134 ஆவது தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவருமான பழனி நாடார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 137 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தென்காசி நகர் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காஜா மைதீன், மாடசாமி ஜோதிடர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News