சுரண்டையில் தாய்ப்பால் வார விழா: கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-04 05:59 GMT

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சுரண்டை ஊட்டச்சத்து மையத்தில் தாய்ப்பால் வார விழாவும், கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹெப்சிபா பியூலா தலைமை வகித்தார். ‌‌ஊட்டச்சத்து மைய பொறுப்பாளர் இந்திரா வரவேற்றார். சுரண்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாம் அருள் மனோஜ் தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதற்காக கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து எடுத்து கொள்ள வேண்டிய அவசியம், குறித்து பேசினார். டாக்டர் மீனா தேவி, சமூக ஆர்வலர் செல்வசுந்தரி சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தொகுப்பினை சசிகுமார் வழங்கினார்.

Tags:    

Similar News