தென்காசி அரசு மருத்துவமனையில் குளிர்பதன வசதி இல்லாததால் உடல் அழுகி சேதம்

தென்காசியில் அரசு தலைமை மருத்துவமனையில் குளிர்பதன வசதி இல்லாததால் உடல் அழுகி சேதமடைந்ததால் உறவினர்கள் ஆத்திரம்

Update: 2022-05-06 06:24 GMT

குளிர்பதன வசதி இல்லாததால் உடல் அழுகி சேதமடைந்ததால் உறவினர்கள் ஆத்திரம்

தென்காசி மாவட்டத்தில்  இலஞ்சி செல்லும் சாலையில் உள்ள மாந்தோப்பில் முதியவர் கோட்டை மாடன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை குற்றாலம் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே உடற்கூறு பரிசோதனை நேற்று செய்யப்படாத நிலையில் உடல் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்று உடற்கூறு பரிசோதனைக்கு முன்னரே கோட்டை மாடன் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் உடலை திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டை மாடன் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோட்டை மாடன் உறவினர்கள் கூறுகையில், கோட்டை மாடன் மர்ம நர்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் 9 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முறையாக செய்வதன் மூலம் அதில் கிடைக்கும் தடயங்களை சேகரிக்க மருத்துவர்கள் தவறவிட்டு விட்டனர். குளிர்பதனம் முறையாக வைக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும் எனவும் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News