பள்ளி மாணவர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, தென்காசி மாவட்ட போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2022-04-28 04:15 GMT

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும், பள்ளிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்போது,  பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், "ஆசிரியர்கள்தான் நம் நாட்டின் பல அறிஞர்களையும், பல ஆராய்ச்சியாளர்களையும் தொழிலதிபர்களையும் உருவாக்கும் ஆசான்கள். பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளித்து மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினர். 

பெற்றோருக்கு இணையாக ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பளித்து, அவர்களின் பேச்சை கேட்டு,  நல்ல முறையில் கல்வி பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News