குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா, புத்தக கண்காட்சி விழா: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Courtallam Today - குற்றாலத்தில் ஆக 5 சாரல் விழா மற்றும் புத்தக கண்காட்சி விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-29 05:06 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.

Courtallam Today - தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி கலை நிகழ்ச்சிகள் ஆணழகன் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, படகுப்போட்டி, நீச்சல் போட்டி, கோலப்போட்டி, மலர் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்,சி அறிவியல் சம்பந்தமான கண்காட்சி என மிகப் பிரமாண்டமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் புத்தக கண்காட்சி மிக பிரம்மாண்டமாக குற்றாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

சாரல் திருவிழா மற்றும் புத்தக திருவிழா திருவிழாவிற்கு நன்கொடை வழங்க உள்ள நபர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.  தொடர்புக்கு 96593 11675 என்ற எண்ணை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News