கீழப்பாவூரில் விமர்சியாக நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணம்

கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-01-31 06:00 GMT

ஆண்டாள் திருக்கல்யாணம்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் ஸ்ரீருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபால க்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த ஆலயத்தில் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இராப்பத்து, பகல்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோலாட்ட நிகழ்ச்சியுடன் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News