ஆனைகுளம் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி

தேசிய திறனாய்வு தேர்வில் ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2021-07-04 11:10 GMT

ஆனைகுளம் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி

தென்காசி மாவட்டம் ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ரிஷ்பா, பொன்னுத்தாய் ஷமிமா ஹஸ்மத் மற்றும் மாணவர் ராம்குமார் ஆகியோர் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறிவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

காயத்ரி என்ற மாணவி ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற்று,கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் தங்கராஜ், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், சிறப்பு பயிற்சி வழங்கிய ஆய்வக உதவியாளர் செல்வக்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலீல் ரகுமான் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News