அம்பேத்கர் நினைவு தினம்: தென்காசியில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
நன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கார் நினைவு தினம். சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை.
இன்று நாடு முழுவதும் அம்பேத்கார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் நன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், வட்டார தலைவர் பெருமாள், உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.