தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-12-06 13:39 GMT

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் ஆலோசனையின் படி டாக்டர் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆயான்நடராஜன், மேகநாதன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி,ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் பொன் சுந்தரம், அணி துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, ராஜேந்திரன், வக்கீல் முருகன், செல்வம், தங்கபாண்டியன், நகர நிர்வாகிகள் ஷேக் பரீத், பால்ராஜ், கலை பால்துரை, கஜேந்திரன், சிவனுபாண்டியன், வட கரை ராமர், ஆனந்தன், தர்மராஜன், வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ், ராமராஜ், ஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News