தென்காசியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-04-05 13:49 GMT

தென்காசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி ஆகியோர் தலைமையில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை அமல்படுத்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், செங்கோட்டை முத்து ராமலிங்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் அதிக அளவில் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News