சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-12-11 00:30 GMT

சங்கரன்கோவிலில், திமுகவின் இணைந்த அதிமுக நிர்வாகிகள். 

தென்காசி தெற்கு திமுக மாவட் செயலாளர் பொ.சிவபத்மநாதன்  முன்னிலையில்,  சங்கரன்கோவில் 22வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சரவணன், சங்கரநாராயணன், சிவபாலன், மகேஷ்வரி, லட்சுமி, கோமதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்து செல்வி, நகர செயலாளர் சங்கரன், இளைஞரணி சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, வார்டு செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News