தென்காசி அருகே பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

தென்காசி அருகே பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-03 04:18 GMT

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்.

தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரிலும் ,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  அறிவுறுத்தலின் பேரிலும் சட்டவிரோதமாக குட்கா,கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பணம்பட்டி பகுதியில் சார்பு ஆய்வாளர்  கிருஷ்ணன்  ரோந்துப் பணியில் இருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த  தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ்  அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (47) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News