தென்காசி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

தென்காசி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-10-20 15:00 GMT

பைல் படம்

தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளது. இதில் திமுக போட்டியிட்ட 9-வார்டு களில் 8 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி ஊராட்சி ஒன்றியம் திமுக வசமானது.

கலாநிதி, அழகுசுந்தரம், ஷேக் அப்துல்லா, செல்வநாயகம், வினோதினி, மல்லிகா, சுப்புலட்சுமி, கனகராஜ் முத்துப்பாண்டி ஆகிய திமுக கவுன்சிலர்கள், இரண்டாவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரியா ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News