தென்காசி அருகே சாலை விபத்தில் அரசு டாக்டர்கள் இருவர் மரணம்-இருவர் காயம்

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் எல்லைப்புளி அருகே மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது

Update: 2021-06-06 14:11 GMT

தென்காசி அருகே சாலை விபத்து

தென்காசி அருகே சாலை விபத்து அரசு மருத்துவர்கள் இருவர் பலி. இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் சாலையில் எல்லைப்புளி அருகே மரத்தில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களான சிதம்பர ராஜ் மற்றும் ராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

அதே வாகனத்தில் பயணித்த மற்றொரு மருத்துவர் முத்துகணேஷ், மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார் படுகாயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைக்கப்பட்டனர். எங்கிருந்து எங்கு செல்கிறார்கள்? விபத்துக்கு மதுபோதை காரணமா ? அல்லது  வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா? என பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News