காந்தி நினைவு நாள்- அனைத்து கட்சியினர் மரியாதை

Update: 2021-01-30 11:30 GMT

தென்காசியில் காந்தி நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் காந்தி நினைவிடத்திலும், காந்தியின் சிலை மற்றும் காந்தியின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசியில் உள்ள காந்தி சிலைக்கு அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பழனி நாடார், திமுக நகர செயலாளர் சாதிர், மதிமுக நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வேல்மயில் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News