மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள்

Update: 2021-01-27 06:45 GMT

மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள் தென்காசியில் நடைபெற்றது.

பாவூர்சத்திரம் ஸ்பார்டன் பிட்னஸ் ரவி , தென்காசி மாவட்ட ஐஎப்சி மற்றும் இந்தியன் பின்னர் ரேஷன் இணைந்து மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2021 ஆணழகன் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 22 மாவட்டங்கள் சார்பாக மொத்தம் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று வீரர்களுக்கு பணப்பரிசு, கேடயம், சான்றிதழ் மற்றும் 4 முதல் 10 இடங்கள் வரை வென்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எம்எல்ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளிலுள்ள தொழிலதிபர்கள் கலந்து கொண்டார்கள். முதல் 3 இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News